என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்கள் திறப்பால் பூக்கள் விலை உயர்வு
Byமாலை மலர்7 July 2021 7:08 AM GMT (Updated: 7 July 2021 7:08 AM GMT)
திருப்பூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பலரும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
திருப்பூர்:
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக கடும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது.
இதில் மிக முக்கியமாக பொது போக்குவரத்து முடக்கம், கோவில்கள் திறக்க அனுமதி ரத்து, சந்தைகள் இயங்க அனுமதி மறுப்பு போன்றவை இருந்தன. இதன் பின்னர் கொரோனா தொற்று குறைய, குறைய ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளையும் வழங்கியது.
இந்த ஒரு பகுதியாக நேற்று முன்தினம் முதல் கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பலரும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதுபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் தற்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது. திருப்பூரில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் முல்லைப்பூ ரூ.160-க்கும், அரளிப்பூ ரூ.30-க்கும், பிச்சிப்பூ ரூ.240-க்கும், ரோஜா ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X