என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மற்றொரு கடையில் விரல் ரேகையை பதிவு செய்த இளம்பெண்ணை உள்படத்திலும் காணலாம். மற்றொரு கடையில் விரல் ரேகையை பதிவு செய்த இளம்பெண்ணை உள்படத்திலும் காணலாம்.](https://img.maalaimalar.com/Articles/2021/Jul/202107021956099188_Tamil_News_Tamil-news-Reenforce-fingerprinting-system-at-ration-shops_SECVPF.gif)
X
மற்றொரு கடையில் விரல் ரேகையை பதிவு செய்த இளம்பெண்ணை உள்படத்திலும் காணலாம்.
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதியும் முறை மீண்டும் அமல்
By
மாலை மலர்2 July 2021 2:26 PM GMT (Updated: 2 July 2021 2:26 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதியும் முறை மீண்டும் அமலுக்கு வந்தது.
திருச்சி:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிந்து (பயோமெட்ரிக் முறை) பொருட்கள் வழங்கும் நடைமுறை இருந்து வந்தது. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் கருவி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதியும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் வந்துள்ள காரணத்தினால் ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிந்து உணவு பொருட்களை பெற்று செல்லும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் எந்திரத்தில் விரல் ரேகையை பதிந்து பொதுமக்கள் உணவு பொருட்களை பெற்றுச் சென்றனர்.
இந்தநிலையில் திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை பயோமெட்ரிக் கருவியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் உணவு பொருட்களை வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்து இருந்தனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு கருவியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் விரல் ேரகையை பதிந்து பொருட்களை பெற்றுச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)