என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்செந்தூரில் விளையாட சென்ற என்ஜினீயர் அடித்துக்கொலை
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகன் சிவமுருகன் (வயது 24).
டிப்ளமோ என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சிவமுருகன் தனது நண்பர்களுடன் திருச்செந்தூர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்திற்கு நேற்று மாலை விளையாட சென்றார்.
மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிவமுருகனின் தாய் அவரது செல்போனுக்கு போன் செய்தார். அப்போது சிவமுருகனின் நண்பர் ஒருவர் போனை எடுத்து அவர் விளையாடி கொண்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்றும் கூறி உள்ளார்.
ஆனால் இரவு 10 மணியை கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவமுருகனின் தம்பி முத்தரசன் அவரை தேடி சென்றார்.
அப்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள சத்துணவு கூடம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிவமுருகன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த அவர் திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிவமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவமுருகனை கொலை செய்தது யார்?. எதற்காக கொலை செய்தனர்?. என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சிவமுருகனுடன் விளையாட சென்ற நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்