search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் வாலிபருக்கு கத்திக்குத்து-4பேரிடம் விசாரணை

    ஆதித்யா வெளியில் வந்தால் கொன்றுவிடுவோம் என கூறி அரவிந்தை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் வாலிபர் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் கைதானவரின் அண்ணனை கொல்லப்பட்ட வாலிபரின் நண்பர்கள் கத்தியால் குத்தினர்.

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே ஏ.பி.டி., ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 25). இவர் கடந்த 2-ந்தேதி கொலை செய்யப்பட்டார். 

    முன்விரோதம், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் தெற்கு தோட்டத்தை சேர்ந்த ஆதித்யா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் ஆதித்யாவின் அண்ணன் ஜீவா காலனியை சேர்ந்த அரவிந்த் (28) வேலை முடிந்து வீட்டுக்கு  சென்றுகொண்டிருந்த போது கொல்லப்பட்ட சம்சுதீனின் நண்பர்கள் மோகன் உட்பட 4  பேர் அரவிந்தை வழிமறித்து மிரட்டினர்.

    ஆதித்யா வெளியில் வந்தால் கொன்றுவிடுவோம் என கூறி அரவிந்தை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த  அரவிந்தை  அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    திருப்பூர் மத்திய பகுதி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அரவிந்தை கொலை செய்ய முயன்ற 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×