search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 2 பேர் கைது

    ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில், காதர் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தார்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை பழைய ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது 34). இவர் நேற்று ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தார். இதனையடுத்து ராணிப்பேட்டை போலீசார், காதரை கைது செய்தனர்.

    அதேபோன்று புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் கோபி (40). இவர் நேற்று புளியங்கண்ணு பஸ் நிறுத்தம் அருகே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நோக்கிலும் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். இதனையடுத்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் கோபியை கைது செய்தனர்.
    Next Story
    ×