search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாத்தான்குளம் பைனான்சியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

    சாத்தான்குளம் பைனான்சியர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் பைனான்சியர் மார்ட்டின் என்பவரை கடந்த 10-ந் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இது தொடர்பாக கொலை தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டி.எஸ்.பி. காட்வின் ஜெகதீஸ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு 8 பேரை கைது செய்தனர். 

    நேற்று மாலை தனிப்படையினர் இட்டமொழி பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் பதுங்கி நின்ற சாத்தான்குளம் தைக்கா தெருவை சேர்ந்த அப்துல் காதர் (வயது 27 )என்பவரை கைது செய்தனர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக மகத், செந்தில் ஆகிய 2 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×