search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உடுமலை வழியாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

    திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு உடுமலை வழியாக மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை சென்று சேரும்.
    உடுமலை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06343) இயக்கப்பட்டு வந்தது. அதேபோன்று எதிர்திசையில் மதுரையில் இருந்து உடுமலை, பாலக்காடு வழியாக திருவனந்தபுரத்திற்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06344) இயக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவி வந்ததைத்தொடர்ந்து அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

    தற்போது அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது. ரெயில் இயக்க கால அட்டவணையில் மாற்றமில்லை. இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக காலை 6.30 மணிக்கு உடுமலைக்கு வருகிறது.அதன் பிறகு உடுமலையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் வழியாக மதுரை செல்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு உடுமலை வழியாக மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை சென்று சேரும்.

    மதுரையில் இருந்து தினசரி மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.03 மணிக்கு உடுமலைக்கு வரும். உடுமலையில் இருந்து புறப்பட்டு பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு சென்று சேரும். சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
    Next Story
    ×