search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கள்ளக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை

    கள்ளக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.72 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் போலீஸ் சரகம் அடுத்த வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ் (வயது 22). இவர் நமச்சிவாயபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் கேஷியராக வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜை பெட்ரோல் போடும்படி கூறியுள்ளார். அவர் பெடரோல் போட திரும்பும்போது மற்றொரு நபர் பிரகாஷ்ராஜின் தலையில் ஹெல்மெட்டால் தாக்கினார். இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் பிரகாஷ் வைத்திருந்த ரூ.72 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    காயமடைந்த பிரகாஷ்ராஜ் சின்னசேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×