என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோப்புபடம் கோப்புபடம்](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106201708261376_Tamil_News_tamil-news-An-old-man-climbed-a-tree-to-pluck-a-leaf-for-a_SECVPF.gif)
X
கோப்புபடம்
ஆட்டுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் மின்சாரம் பாய்ந்து பலி
By
மாலை மலர்20 Jun 2021 11:38 AM GMT (Updated: 20 Jun 2021 11:38 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராமநாதபுரம் அருகே ஆட்டிற்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள மாடக்கொட்டான் ஊராட்சி ரமலான் நகர் பகுதியை சேர்ந்த ஆதம் என்பவரின் மகன் ஜகாங்கீர்அலி (வயது60). இவர் நேற்று காலை வீட்டின் அருகில் ஆடுகளுக்கு மரக்கிளை பறிப்பதற்காக வேப்ப மரத்தில் ஏறி உள்ளார்.
அங்கு மரத்தில் இருந்தவாறு இலைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை அருகில் இருந்த மின்கம்பியின் மீது உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் மரக்கிளையில் இருந்த ஜகாங்கீர் அலியின் உடல்மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார்.
அவர் மரக்கிளையில் தொங்கியபடி இருந்ததை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மின்வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரியத்தினர் மின்சாரத்தை நிறுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து சென்று மின்சாரம் பாய்ந்து பலியாகி மரக்கிளையில் தொங்கியபடி இருந்த ஜகாங்கீர் அலியின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரின் மகன் காதர்மைதீன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)