search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வெளியே சுற்றியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியே சுற்றியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 26). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த கவுதம் அடிக்கடி வெளியே சென்று நண்பர்களை சந்தித்து வந்தார்.

    இதைபார்த்த கவுதமின் தாய் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. தேவை இல்லாமல் அடிக்கடி வெளியே சுற்ற வேண்டாம். வீட்டிலேயே இருக்குமாறு அறிவுரை கூறி கண்டித்தார்.

    அப்போது கோபமடைந்த கவுதம் தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று விரக்தி அடைந்த கவுதம் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×