search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    திருப்பூர் மாவட்டம் வேலம்பாடி பகுதிக்கு உட்பட்ட சுண்டக்காய் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). சம்பவத்தன்று கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற இவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இதேபோன்று ராயனூர் வீனஸ் நகர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (26) என்பவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசில் இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×