என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்ட எல்லையில் 4-வது நாளாக குவிந்த மதுப்பிரியர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கி செல்கின்றனர்
Byமாலை மலர்18 Jun 2021 12:14 PM GMT (Updated: 18 Jun 2021 12:14 PM GMT)
தர்மபுரி மாவட்ட எல்லையில் 4-வது நாளாக மதுப்பிரியர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கி செல்கின்றனர்.
நல்லம்பள்ளி:
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூரை ஒட்டியுள்ள உம்மியம்பட்டி, சனிசந்தை, மானியதஅள்ளி ஆகிய 3 கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த 3 டாஸ்மாக் கடைகளிலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் ஏராளமானவர்கள் மூட்டை, மூட்டையாக மதுவாங்கி செல்கின்றனர்.
மாலை 5 மணிக்கு கடை மூடப்பட்டு விடுவதால் மறுநாள் காலையில் அதிகாலையிலேயே கடை திறக்கும் முன்பாக வந்து நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்து கிடக்கின்னர். கடந்த 3 நாட்களாக இந்த டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்கின்றனர். அப்படி இருந்தும் கூட்டம் குறைந்தபாடில்லை.
நேற்று 4-வது நாளாக இந்த 3 கடைகளிலும் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியது. மது வாங்கும் ஆர்வத்தில் மதுபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டதாக தெரிகிறது. இதனால் இந்த 3 டாஸ்மாக் கடைகள் மூலமாக தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இ்ந்த 3 டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று இருமாவட்ட எல்லைப்பகுதிமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X