search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கச்சிராயப்பாளையம் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

    கச்சிராயப்பாளையம் அருகே ஆடு திருடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
    கச்சிராயப்பாளையம்:

    கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். சம்பவத்தன்று இரவு இவருக்கு சொந்தமான 3 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, வினோத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆடுகளை திருடியது கரடிசித்தூர் கிராமத்தை சார்ந்த ராகுல் (வயது 21), விக்ரம் (21 ) மற்றும் 18 வயதுடைய இளைஞர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×