search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொள்ளாச்சி அருகே மதுபாட்டில் கடத்திய வேன் பறிமுதல்

    பொள்ளாச்சி அடுத்துள்ள ரெட்டியார் மடம் காவல்துறை சோதனை சாவடியில் போலீசார் இரவு நேர வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்துள்ள ரெட்டியார் மடம் காவல்துறை சோதனை சாவடியில் போலீசார் இரவு நேர வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அங்கலக்குறிச்சியை சேர்ந்த வசந்த் என்பவர் வேனில் பதுக்கி வைத்திருந்த 63 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆழியார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×