என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்டணம் செலுத்த கடைசி நாள்: மின்வாரிய அலுவலகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Byமாலை மலர்16 Jun 2021 2:49 PM GMT (Updated: 16 Jun 2021 2:49 PM GMT)
மின்கட்டணம் செலுத்த நேற்று கடைசி நாள் என்பதால் நாகர்கோவில் மின்வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்:
கொரோனா ஊரடங்கால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் ஜூன் 15-ந் தேதி வரை நீட்டித்தது தமிழக அரசு. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் நேற்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்ற அவர்கள் மின் கட்டணத்தை செலுத்தினர்.
நாகர்கோவிலில் வடசேரி, மீனாட்சிபுரம், பார்வதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 7 மின்வாரிய அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால், மின்வாரிய ஊழியர்கள் திகைத்து போனார்கள்.
மேலும் அவ்வப்போது, கட்டணம் செலுத்துவதற்கான மின்வாரிய இணையதளத்தின் சர்வரில் கோளாறும் ஏற்பட்டது. இதனால் கட்டணம் செலுத்துவதற்கு வந்தவர்கள் சில மணி நேரம் காத்திருந்து கட்டணத்தை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X