என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆனைமலையில் டிரோன் கேமிரா மூலம் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப் படுகிறதா? என்பதை மதுவிலக்கு போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது இதனால் ஆங்காங்கே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக தெரியவந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி பகுதியில் வனப்பகுதி அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது இதையடுத்து டிரோன் கேமிரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னக் காமணன், ராஜபிரபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் டிரோன் கேமிரா மூலம் செமணாம்பதி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச படவில்லை என்பது தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்