என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்காத 355 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்- ராதாகிருஷ்ணன்
சென்னை:
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ஒரு கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை தமிழகம் எட்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பயனாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது.
இது மன நிறைவை அளித்தாலும் பொது மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். நோய் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் நல்ல முன்னேற்றம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் ஐ.சி.யூ., ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 49 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் 1348 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 355 பேர் கொரோனா தொற்று ஏற்படாதவர்கள். மாநிலத்தில் தற்போது 9,520 கருப்பு பூஞ்சை மருந்துகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்