என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா மரண சான்றிதழ்: நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Byமாலை மலர்11 Jun 2021 7:05 AM GMT (Updated: 11 Jun 2021 7:05 AM GMT)
கொரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களுக்கு கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்படாததால், நிவாரண நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை கொரோனா தொற்று உலுக்கி வருகிறது. குறிப்பாக 2-வது அலையில் பலி எண்ணிக்கை அதிகம். தாய்- தந்தையை இழந்து ஏராளமான குழந்தைகள் பரிதவித்து வருகின்றன. வருமானம் ஈட்டிக் கொடுத்த மகனை இழந்து பெற்றோர் கஷ்டப்படுகிறார்கள்.
மாநில மற்றும் மத்திய அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி, கல்வி கட்டணம் போன்றவற்றை வழங்க உறுதி அளித்துள்ளது.
ஆனால், கொரோனா மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் உள்ளது. இந்த நிலையில் கொரோனா மரணம் என இறப்பு சான்றிதழ் வழங்கப்படாததால், நிவாரணம் மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீததிப கொண்ட அமர்வு ‘‘நாடு முழுவதும் கொரோனா மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை. கொரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களின் சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மரணம் குறித்த பதிவுகள் தெளிவாக இருந்தால்தான் நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும்’’ என்ற கருத்து தெரிவித்தது.
மேலும், தமிழக அரசு ஆய்வு குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை ஜூன் 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X