search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

    திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    திருச்சி:

    விருதுநகர் மாவட்டம் பாவலி சந்திரகிரிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 32). இவர் திருச்சி மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். சிறை வளாகத்தில் உள்ள தெற்கு காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நாராயணசாமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சக காவலர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். இதையடுத்து, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது உறுதியானது. அவருக்கு ஆக்சிஜன் பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு நாராயணசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    Next Story
    ×