என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர்
Byமாலை மலர்9 Jun 2021 11:13 AM GMT (Updated: 9 Jun 2021 11:13 AM GMT)
போடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளே விழுந்த பாலகிருஷ்ணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
போடி:
போடி அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ராசிங்காபுரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள 100 அடி ஆழ கிணற்றின் பக்கவாட்டு பகுதிகளில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணன் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளே விழுந்த பாலகிருஷ்ணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
இதற்கிடையே அவரது அபயகுரல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த முதியவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போடி அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ராசிங்காபுரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள 100 அடி ஆழ கிணற்றின் பக்கவாட்டு பகுதிகளில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணன் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளே விழுந்த பாலகிருஷ்ணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
இதற்கிடையே அவரது அபயகுரல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த முதியவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X