என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிதாக 365 பேருக்கு கொரோனா : சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது
Byமாலை மலர்9 Jun 2021 3:28 AM GMT (Updated: 9 Jun 2021 3:28 AM GMT)
மாவட்டத்தில் நேற்று 1,348 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 58 ஆயிரத்து 625 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
மதுரை:
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை மிகக் கடுமையாக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை போலவே மதுரையிலும் நாளுக்கு நாள் பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 365 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 155 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இது வரை 68 ஆயிரத்து 684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 1,348 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 58 ஆயிரத்து 625 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து 9 ஆயிரத்து 671 ஆக உள்ளது. மதுரையில் கடந்த மே மாதம் 28-ந்தேதி நிலவரப்படி 16 ஆயிரத்து 86 பேர் சிகிச்சையில் இருந்தனர். அதன் பின்பு தினமும் குணமடைந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனிடையே நேற்று மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 4 பேர் அரசு மருத்துவமனைகளிலும், ஒருவர் ெரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தவர்கள் ஆவர்.
56, 55, 57 வயது பெண்கள், 64, 86, 71 வயது மூதாட்டிகள், 78 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை மிகக் கடுமையாக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை போலவே மதுரையிலும் நாளுக்கு நாள் பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 365 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 155 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இது வரை 68 ஆயிரத்து 684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 1,348 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 58 ஆயிரத்து 625 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து 9 ஆயிரத்து 671 ஆக உள்ளது. மதுரையில் கடந்த மே மாதம் 28-ந்தேதி நிலவரப்படி 16 ஆயிரத்து 86 பேர் சிகிச்சையில் இருந்தனர். அதன் பின்பு தினமும் குணமடைந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனிடையே நேற்று மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 4 பேர் அரசு மருத்துவமனைகளிலும், ஒருவர் ெரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தவர்கள் ஆவர்.
56, 55, 57 வயது பெண்கள், 64, 86, 71 வயது மூதாட்டிகள், 78 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X