search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தர்மபுரி மாவட்டத்தில் 240 பேருக்கு தொற்று - கொரோனாவுக்கு 6 பேர் பலி

    தர்மபுரி மாவட்டத்தில் நேற்று வெளியான பரிசோதனைகளின் முடிவில் மாவட்டத்தில் புதிதாக 240 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம்கள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனைகளின் முடிவில் மாவட்டத்தில் புதிதாக 240 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,851 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 313 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேலும் 313 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2,772 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 154 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 21,165 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
    Next Story
    ×