search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மதுகுடித்ததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

    சாத்தான்குளம் அருகே தாய் மதுகுடித்ததை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 22). இவருக்கு மது மற்றும் புகை அருந்தும் பழக்கம் இருந்ததால் அவரது தாயாரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் கண்டித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு தாயார் அவரை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ஹரிகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×