என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வத்தலக்குண்டு அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்கள் கைது
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள செங்கட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் வனராஜ் (வயது 51). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதே போல் நேற்று ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை வனராஜ் கத்தியால் குத்தினார்.
அவர் வலியால் சத்தம் போடவே அருகில் இருந்த அவர்களது மகன்கள் முத்துசாமி (29), ஊர்காலன் (24) ஆகியோர் ஓடி வந்து தனது தந்தையை சத்தம் போட்டனர்.
மேலும் அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த வனராஜ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து முத்துச்சாமி, ஊர்காலன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்