என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடுமாங்காய் விளைச்சல் இல்லாததால் மலைவாழ் மக்கள் கவலை
Byமாலை மலர்4 Jun 2021 5:20 AM GMT (Updated: 4 Jun 2021 5:20 AM GMT)
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த ஆண்டு கன்னி மாங்காய் என்கிற வடுமாங்காய் விளைச்சல் இல்லாததால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை அருகே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் உள்ளது மேற்குத் தொடர்ச்சி மலை. இங்குள்ள 18 செட்டில்மெண்ட் கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், தேன் எடுப்பது, பட்டுப் பூச்சி வளர்ப்பு, மூலிகைப்புல்லில் இருந்து தைலம் தயாரிப்பது உள்ளிட்டவை இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன.
மேலும் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு ஏராளமான குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மரங்களில் காய்க்கும் கன்னி மாங்காய்களும் மலைவாழ் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
இதன்படி ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கன்னி மாங்காய் காய்க்கும் சீசன். இதைப் பயன்படுத்திக் கொண்டு மலைவாழ் மக்கள் மாங்காயை பறித்து உடுமலை நகர பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடந்தூர், மஞ்சம்பட்டி, தளிஞ்சி, தளிஞ்சி வயல் என ஒரு சில மலைக் கிராமங்களில் உள்ள மரங்களில் மட்டும் சிறிதளவே கன்னி மாங்காய் காய்த்துள்ளது.
மேலும் வழக்கத்துக்கு மாறாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கன்னி மாங்காய் விளைச்சல் முற்றிலும் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என மலைவாழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X