search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சேரன்மகாதேவியில் திருமணமான 6 நாளில் புதுப்பெண் தற்கொலை

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் திருமணமான 6 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த மணிமேகலா (வயது 21) என்பவருக்கும் கடந்த 24-ந் தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் வீடு திரும்பிய நிலையில் நேற்று மணிமேகலா வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் அவர் வெளியே வராததால் உறவினர்கள் அறைக்கு சென்ற போது, அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மணிமேகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    மணிமேகலா திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு வாலிபரை காதலித்து வந்ததுள்ளார். அந்த வாலிபருடன் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் மணிமேகலா கூறிவந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக மாப்பிள்ளை பார்த்து கடந்த வாரம் திருணமத்தையும் நடத்தி முடித்து விட்டனர்.

    இந்தநிலையில் திருமணம் முடிந்த மறுநாளே மணிமேகலா தனது கணவரிடம் தனது காதல் விபரத்தை கூறி உள்ளார். சினமா படங்களில் வருவது போல தனது கணவர் தன்னை காதலருடன் சேர்த்து வைத்துவிடுவார் என்று நினைத்துள்ளார். ஆனால் அவரது கணவரோ அதை கண்டு கொள்ளாமல் எல்லாம் சரியாகி விடும் என்று கூறி உள்ளார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிமேகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    Next Story
    ×