search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் திறக்கப்பட்டுள்ள உதவி மையம்.
    X
    அரசு ஆஸ்பத்திரியில் திறக்கப்பட்டுள்ள உதவி மையம்.

    அரசு ஆஸ்பத்திரியில் உதவி மையம் திறப்பு

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு வசதியாக தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஆஸ்பத்திரி வளாகத்தில் எந்த வார்டுக்கும் எளிதில் செல்லலாம்.
    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும்  ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.தற்போது கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் எந்தெந்த சிகிச்சைக்கு எங்கு செல்ல வேண்டும் என்பது தெரியாமல் தவித்து வந்தனர். மருத்துவமனை பணியாளர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொண்டு செல்வார்கள்.

    தற்போது நோயாளிகளுக்கு உதவுவதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.இங்கு பணியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரிடம் சென்று தாங்கள் சிகிச்சை பெற வேண்டிய இடத்தை தெரிந்து கொண்டு செல்லலாம்.மேலும் கொரோனா வார்டுகள் , தடுப்பூசி மையங்கள் எந்தெந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும்  அறிந்து கொண்டு செல்லலாம்.
     
    நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களும் எப்படி செல்ல வேண்டும் என்று தெரியாமல்  அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போது அமைக்கப்பட்டுள்ள உதவி மையம் அவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
    Next Story
    ×