search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இலவச ஆம்புலன்ஸ் சேவை

    வெள்ளக்கோவிலில் தனியார் அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில் நிழல்கள் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்பவர்கள் ஆம்புலன்சுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.எனவே உதவும் நோக்கில் நிழல்கள் அறக்கட்டளையினர் கொரோனா பாதித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்குகின்றனர்.

    உதவி தேவைப்படுவோர் 9443136166 என்கிற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×