என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேசன் கடைகள் நாளை முதல் நான்கு மணி நேரம் செயல்படும்: தமிழக அரசு
Byமாலை மலர்24 May 2021 1:25 PM GMT (Updated: 24 May 2021 1:25 PM GMT)
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ரேசன் கடைகளுக்கு மட்டும் தற்போது விலக்கி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி (இன்று) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மக்கள் எந்தவித அச்சமின்றி தெருக்களில் சுற்றித்திரிந்தனர். இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கான நோக்கம் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் தமிழக அரசு நேற்றுமுன்தினம் மருத்துவர்களை கொண்ட நிபுணர்கள் குழு, எம்எல்ஏ-க்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தி இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தது.
நேற்றிரவு 9 மணியுடன் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இன்று காலை 6 மணியில் இருந்து முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பால் மற்றும் மெடிக்கல் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாளையில் இருந்து ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X