என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்புதல் தேர்வு-தவிக்கும் ஆசிரியர்கள்
Byமாலை மலர்24 May 2021 7:28 AM GMT (Updated: 24 May 2021 7:28 AM GMT)
பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் குழு உருவாக்கி தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ்-ஆப் வாயிலாக திருப்புதல் தேர்வு இன்று (24-ந் தேதி) முதல் வருகிற 27-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக பாட ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடக்கிய தனி வாட்ஸ்-ஆப் குழு உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் சிலர் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிக்கு சென்று வருகின்றனர்.
ஒரு சில மாணவ-மாணவியர்கள் தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் பொருளாதார சிக்கலால் செல்போன் வாங்க முடியவில்லை என கூறுகின்றனர்.இதனால் மாணவ-மாணவிகளை ஒருங்கிணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.வீட்டில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் தனிப்பட்ட காரணங்களால் பல இன்னல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவது சாத்தியமா? அப்படி விடுபடும் மாணவர்களின் கதி என்ன? இந்த சிக்கலுக்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X