search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்புதல் தேர்வு-தவிக்கும் ஆசிரியர்கள்

    பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் குழு உருவாக்கி தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.
    உடுமலை:

    உடுமலை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ்-ஆப் வாயிலாக திருப்புதல் தேர்வு இன்று (24-ந் தேதி) முதல் வருகிற 27-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக பாட ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடக்கிய தனி வாட்ஸ்-ஆப் குழு உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் சிலர்  ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிக்கு சென்று வருகின்றனர்.

    ஒரு சில மாணவ-மாணவியர்கள் தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் பொருளாதார சிக்கலால் செல்போன் வாங்க முடியவில்லை என கூறுகின்றனர்.இதனால் மாணவ-மாணவிகளை ஒருங்கிணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.வீட்டில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் தனிப்பட்ட காரணங்களால் பல இன்னல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
     
    இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவது சாத்தியமா? அப்படி விடுபடும் மாணவர்களின் கதி என்ன? இந்த சிக்கலுக்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.
    Next Story
    ×