என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அச்சத்தால் முதியவர் தற்கொலை
Byமாலை மலர்23 May 2021 7:54 AM GMT (Updated: 23 May 2021 7:54 AM GMT)
தாராபுரம் அருகே கொரோனா அச்சத்தால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், சின்ன காளியம்மன்கோயில் அருகே உள்ள நாராயண பிள்ளை தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 75). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார்.கொரோனா நோய் தொற்று காரணமாக நாள்தோறும் பலர் இறப்பதை பார்த்து சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தனியாக இருந்த வீரப்பன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X