search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேப்பிலை வைத்து பூஜை செய்யப்பட்ட காட்சி.
    X
    ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேப்பிலை வைத்து பூஜை செய்யப்பட்ட காட்சி.

    தொற்று நோயை தடுக்க சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேப்பிலை வைத்து பூஜை

    தொற்று நோயை தடுக்க சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேப்பிலை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத ஒரு சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.
     
    சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

    உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.
     
    இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும்கிடையாது. அடுத்தபொருள் வேறு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருள் வைக்கப்பட்டிருக்கும். அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்டபோது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்துபோனது.

    துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்டபோது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. கடந்த மாதம் 23-ந்தேதி முதல் குங்குமம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
     
    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நாகேஸ்வரி (வயது 31) என்ற பக்தரின் கனவில் வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
     
    இதையடுத்து அதில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக பக்தர்கள் கூறுகையில், வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் தெய்வங்களை குறிக்கும் விதமாக உள்ளது. அதாவது வில்வம் சிவனையும், வேப்பிலை மாரியம்மனையும், துளசி பெருமாளையும், அருகம்புல் விநாயகரையும், விபூதி முருகனையும் குறிக்கிறது. இதை தவிர மஞ்சள் தூள் கிருமி நாசினியாகவும், மங்கலகரமானது என்பதையும் குறிக்கிறது. இந்த தெய்வங்களின் சக்தி ஒன்று சேர்ந்து தற்போது உள்ள தொற்று நோயில் இருந்து உலகத்தை காக்கும் என்றும், மேலும் இதனுடைய தாக்கம் வரும் காலங்களில் தெரியும் என்றனர்.
    Next Story
    ×