என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 3,264 பேருக்கு கொரோனா - 14 பேர் பலி
Byமாலை மலர்18 May 2021 12:56 AM GMT (Updated: 18 May 2021 12:56 AM GMT)
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் கோவையில் தொற்று கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவை:
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் கோவையில் தொற்று கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியல்படி நேற்று கோவையில் புதிதாக 3 ஆயிரத்து 264 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 804 ஆக அதிகரித்து உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 35 வயது பெண், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வந்த 4 பெண்கள், 9 ஆண்கள் என 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 886 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 1,244 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
கோவையில் இதுவரை 93 ஆயிரத்து 723 பேர் கொரோனாவில் இருந்து குணமடை ந்துள்ளனர். தற்போது 24 ஆயிரத்து 195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் கோவையில் தொற்று கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியல்படி நேற்று கோவையில் புதிதாக 3 ஆயிரத்து 264 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 804 ஆக அதிகரித்து உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 35 வயது பெண், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வந்த 4 பெண்கள், 9 ஆண்கள் என 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 886 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 1,244 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
கோவையில் இதுவரை 93 ஆயிரத்து 723 பேர் கொரோனாவில் இருந்து குணமடை ந்துள்ளனர். தற்போது 24 ஆயிரத்து 195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X