search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,405 ஆக உயர்ந்துள்ளது. இதில் 35 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 131 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 32 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 7 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 8 பேரும் என மொத்தம் 178 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,405 ஆக உயர்ந்துள்ளது. இதில் 35 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 30 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 3,098 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,271 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×