என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னைக்கு அடுத்தப்படியாக ஹாட்ஸ்பாட்-ஆக மாறிய கோவை: இன்று 3197 பேர் பாதிப்பு
Byமாலை மலர்14 May 2021 3:49 PM GMT (Updated: 14 May 2021 3:49 PM GMT)
தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 31,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சென்னையில் இன்று 6538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டமாக மாறியுள்ளது. இன்று கோவை மாவட்டத்தில் 3197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்கட்டில் 2225 பேருக்கும், கன்னியாகுமரில் 1025 பேருக்கும், மதுரையில் 1250 பேருக்கும், திருவள்ளூரில் 1410 பேருக்கும், திருச்சியில் 1224 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 140 பேருக்கும், சிவகங்கையில் 242 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டியதால், தமிழக அரசு நாளை முதல் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X