search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் இ-பதிவு முறை கட்டாயம்: 17-ந்தேதி காலை முதல் அமலுக்கு வருகிறது

    தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே பயணம் செல்ல இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கடந்த இரண்டு நாட்களாக 30 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இன்று தளர்வுகளுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இ-பதிவு முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. வருகிற 17-ந்தேதி முதல் இது அமல்படுத்த இருக்கிறது. இதன்படி மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யவும், மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்யவும் இ-பதிவு கட்டாயமாகும்.
    Next Story
    ×