என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவக்குறிச்சி அருகே மது விற்ற 5 பேர் கைது
Byமாலை மலர்14 May 2021 11:00 AM GMT (Updated: 14 May 2021 11:00 AM GMT)
அரவக்குறிச்சி அருகே மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி அருகே சவுந்தராபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், அரவக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 22) என்பவர் தனது ஸ்கூட்டரில் வைத்து மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர்.
குளித்தலை அருகே உள்ள அய்யனூர் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், குளித்தலை போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (37) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அங்கிருந்த 110 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்றதாக அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்த கதிர் (27), தளவாப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் (52), மகேந்திரன் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X