என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சம் : ஒரே நாளில் 712 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்13 May 2021 10:15 PM GMT (Updated: 13 May 2021 10:15 PM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில வாரங்களாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 500-க்கு குறைவாக இருந்தது. ஆனால் பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 886-ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 265 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 867-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதித்த 4 ஆயிரத்து 753 பேர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருப்பூரை சேர்ந்த 72 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 266-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில வாரங்களாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 500-க்கு குறைவாக இருந்தது. ஆனால் பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 886-ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 265 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 867-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதித்த 4 ஆயிரத்து 753 பேர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருப்பூரை சேர்ந்த 72 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 266-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X