search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவி
    X
    கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவி

    மடிக்கணினி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

    மடிக்கணினி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கதனேசன்- தமிழ்செல்வி தம்பதியரின் மகள் சிந்துஜா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மடிக்கணினி வாங்க, உண்டியலில் பணம் சேர்த்து வந்தார்.

    சமீபத்தில் தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் சிந்துஜா கலந்து கொண்டு 2-வது பரிசாக ரூ.500 பெற்றார். அதையும் உண்டியலில் போட்டார்.

    தற்போது கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் நோய் பாதிப்புகள் குைறய தமிழக முதல்-அமைச்சருக்கு பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகிறார்கள்.

    எனவே தான் ஆசையாக மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

    இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த கதனேசன், உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.1,500-ஐ வங்கியில் கொடுத்து வரைவோலையாக எடுத்தார். பின்னர் அதனை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக நேற்று மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார். மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×