என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பென்னாகரம் அருகே கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - இழப்பீடு கோரி உறவினர்கள் முற்றுகை
Byமாலை மலர்6 May 2021 3:10 PM GMT (Updated: 6 May 2021 3:10 PM GMT)
பென்னாகரம் அருகே கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். இழப்பீடு கோரி உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நீர்குந்தி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவர் நீர்குந்தி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு தீவனம் வைத்த போது எதிர்பாராதவிதமாக மோகன் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக உறவினர்கள் பென்னாகரம் போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோகனின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மோகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் தனியார் கோழிப்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த மோகனுக்கு ஜோதி என்ற மனைவியும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X