என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்
Byமாலை மலர்4 May 2021 1:03 PM GMT (Updated: 4 May 2021 1:03 PM GMT)
இந்திய விமானப்படை விமானம் இங்கிலாந்தில் இருந்து 450 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்னை வந்தடைந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை சூறாவளியாக சுழற்றி அடித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தினந்தோறும் சராசரியாக 3.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2-வது அலையில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
ஒரே நேரத்தில் அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை வழங்கி உதவி புரிகின்றன.
ஏற்கனவே, சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து இந்திய விமானப்படை மூலம் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்த நிலையில் இன்று இங்கிலாந்தில் இருந்து 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னைக்கு விமானப்படை விமானங்கள் மூலம் வந்தடைந்தன. இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X