என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜினாமா ஏற்பு: ஆளுநர் மாளிகை தகவல்
Byமாலை மலர்3 May 2021 1:48 PM GMT (Updated: 3 May 2021 1:48 PM GMT)
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை பெற்று தோல்வியை தழுவியதால், எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது. அதிமுக தனிப்பட்ட முறையில் 65 இடங்களில் வெற்றி பெற்றது.
இதனால் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தோல்வியை ஒப்புக்கொண்டு ஆளுநருக்கு முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இந்த நிலையில் அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ததால், சட்டசபை கலைக்கப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X