search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சின்னதாராபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

    சின்னதாராபுரம் அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    க.பரமத்தி:

    சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்த முனியப்பன் மகன் அஜித்குமார் (வயது 28). இவர் தனது வீட்டில் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசில் அஜித்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31), சதீஷ்குமார் (29), மோகன் (28) ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேர் தான் அஜித்குமார் வளர்த்த ஆட்டை திருடிச் சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
    Next Story
    ×