என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீர் குழாய் சீரமைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்29 April 2021 2:10 PM GMT (Updated: 29 April 2021 2:10 PM GMT)
தேனி அருகே குடிநீர் குழாய் சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி:
தேனி நகர் மதுரை சாலையில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது அந்த வழியாக சின்டெக்ஸ் தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சீரமைக்காமல் விட்டதால் குடிநீரில் சாக்கடை கலக்கும் நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் மதுரை சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி அலுவலர்களும் அங்கு வந்தனர். உடைப்பு ஏற்பட்ட குழாய்களை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X