என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீர் என நினைத்து மண்எண்ணைய் குடித்த 2 வயது குழந்தை பலி
Byமாலை மலர்25 April 2021 9:52 AM GMT (Updated: 25 April 2021 9:52 AM GMT)
அம்பை அருகே தண்ணீர் என நினைத்து மண்எண்ணைய் குடித்த 2 வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
அம்பையை அடுத்த சாட்டுபத்து பவுன்டி தெருவை சேர்ந்தவர் பரமசிவன். தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், 2 வயதில் மதுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
நேற்று இரவு இசக்கியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த மதுஸ்ரீ வீட்டிற்கு வந்து உள்ளார்.
அப்போது அவருக்கு தாகம் எடுத்துள்ளது. அங்கு குளிர்பான பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த மண்எண்ணையை தண்ணீர் என்று நினைத்த மதுஸ்ரீ அதனை எடுத்து குடித்து விட்டார்.
இதனால் அலறித்துடித்த அவரை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் மதுஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X