என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி
Byமாலை மலர்20 April 2021 11:38 PM GMT (Updated: 21 April 2021 12:21 PM GMT)
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 729-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். தற்போது பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடும் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 159 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 729-ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 262-ஆக உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 235 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 46 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 232-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். தற்போது பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடும் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 159 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 729-ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 262-ஆக உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 235 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 46 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 232-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வந்து கொண்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X