search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

    கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 729-ஆக உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். தற்போது பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடும் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 159 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 729-ஆக உயர்ந்துள்ளது.

    இதுபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 262-ஆக உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 235 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 46 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 232-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வந்து கொண்டிருக்கிறது.
    Next Story
    ×