search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கரூர் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று

    கரூர் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூர் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி, கரூர் அப்பிபாளையத்தை சேர்ந்த 25 வயது ஆண், காந்தி கிராமத்தை சேர்ந்த 14 வயது பெண், 37 வயது ஆண், 49 வயது பெண், குளித் தலையை சேர்ந்த 57 வயது ஆண், 33 வயது ஆண்.

    கரூர் வெங்கமேட்டை சேர்ந்த 23 வயது ஆண் மற்றும் 44 வயது ஆண், திருக்காம்புலியூரை சேர்ந்த 20 வயது பெண், வேலுச்சாமி புரத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி, பள்ளப்பட்டியை சேர்ந்த 30 வயது பெண், செல்வநகரைச் சேர்ந்த 56 வயது ஆண், காமராஜர் நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, காக்காவாடியை சேர்ந்த 56 வயது பெண், தாந்தோணிமலையை சார்ந்த 61 வயது பெண் மற்றும் 27 வயது பெண்.

    மணவாசியை சேர்ந்த 16 வயது சிறுவன், வையாபுரி நகரை சேர்ந்த 36 வயது பெண், வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த 23 வயது ஆண், காந்தி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது ஆண், புகளூரை சேர்ந்த 32 வயது ஆண், ஆண்டாங்கோவிலை சேர்ந்த 65 வயது பெண், குப்பம் பகுதியை சேர்ந்த 58 வயது ஆண், அரவக்குறிச்சியை சேர்ந்த 27 வயது ஆண்.ரெட்டியப்பட்டியை சேர்ந்த 25 வயது ஆண், நாகனூரை சேர்ந்த 50 வயது ஆண், மூலக்காட்டானூரை சேர்ந்த 61 வயது ஆண் மற்றும் 50 வயது பெண், வெண்ணைமலையை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×