search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 516-ஆக உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 516-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் 147 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 103-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும், சிகிச்சை பலன் இன்றி 231 இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×