என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராதாபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்18 April 2021 5:43 PM GMT (Updated: 18 April 2021 5:43 PM GMT)
ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் ராதாபுரத்தில் நடந்தது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் ராதாபுரத்தில் நடந்தது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர் அர்ச்சனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பாபு, ரமணி, பாலாஜி, செவிலியர்கள் முத்துராமலிங்கம், சுபாஷினி, லேப் டெக்னிஷியன் ஆபேல்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். ஊராட்சி ஒன்றிய துப்புரவு பணியாளர்கள் கிராம தெருக்களில் கிருமிநாசினி தெளித்ததோடு, துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் ராதாபுரத்தில் நடந்தது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர் அர்ச்சனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பாபு, ரமணி, பாலாஜி, செவிலியர்கள் முத்துராமலிங்கம், சுபாஷினி, லேப் டெக்னிஷியன் ஆபேல்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். ஊராட்சி ஒன்றிய துப்புரவு பணியாளர்கள் கிராம தெருக்களில் கிருமிநாசினி தெளித்ததோடு, துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X