என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
Byமாலை மலர்14 April 2021 11:45 PM GMT (Updated: 14 April 2021 11:45 PM GMT)
வதந்திகளை நம்பாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய முகாமை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி திருவிழா மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்னும் குழுக்கள் அதிகப்படுத்தப்பட்டு தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 முதல் 8 வாரத்துக்கு பிறகு அடுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முககவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய முகாமை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி திருவிழா மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்னும் குழுக்கள் அதிகப்படுத்தப்பட்டு தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 முதல் 8 வாரத்துக்கு பிறகு அடுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முககவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X